திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்​னை​யில் கடந்த ஓராண்​டாகவே மின்​னஞ்​சல் மூலம் பள்​ளி, கல்​லூரி​கள், அரசு அலு​வல​கங்​கள், முதல்வர், அமைச்​சர்​களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​ வந்த வண்ணம் இருக்கிறது. இதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (அக்., 4) திருவான்மியூரில் உள்ள தமிழக முன்னாள் டிஜிபி நட்ராஜ், மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி வீடு ஆகிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, ஆளுநர் மாளி​கை, முதல்​வர் ஸ்டா​லின் வீடு, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, விமான நிலை​யம் உட்பட சென்​னை​யில் பல்​வேறு இடங்​களுக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்​ட​து குறிப்பிடத்தக்கது. பின்னர், குண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இருப்பினும் மிரட்டல் மின்​னஞ்​சலை அனுப்​பியது யார் என்று போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.