23 தொகுதிகளில் பாஜக போட்டி... தொகுதி பங்கீடு தகவல் கசிந்தது

23 தொகுதிகளில் பாஜக போட்டி... தொகுதி பங்கீடு தகவல் கசிந்தது

அதிமுக கூட்டணியில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் எனத் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதையடுத்து அதிக தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கோரிவந்தது.

இந்​நிலை​யில், பாஜக தேர்​தல் பொறுப்​பாளர்​களான மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால் நேற்று சென்னை வந்​தனர். எம்​.ஆர்​.சி.நகரில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் ஆலோ​சனை நடத்​தினர்.

இந்த ஆலோ​சனை கூட்​டத்​தில், பாஜக தரப்​பில் பியூஷ் கோயல், அர்​ஜுன் ராம் மேக்​வால், மேலிட பொறுப்​பாளர்​கள் சுதாகர் ரெட்​டி, அரவிந்த் மேனன், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​க​னும், அதி​முக சார்​பில், பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, திண்​டுக்​கல் சீனி​வாசன், கே.பி.​முனு​சாமி, தங்​கமணி உள்​ளிடோரும் பங்​கேற்​ற​னர்.

இதில், தமிழக அரசி​யல் கள நில​வரம், கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைப்​பு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவ​காரம், தொகுதி பங்​கீடு குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​ட​ணி​யில் இடம் பெறும் கட்​சிகள் எவ்​வாறு ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என்​பது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினர். இந்​நிலை​யில், அதி​முக 170 தொகு​தி​களில் போட்​டி​யிட பாஜக​விடம் விருப்பம் தெரி​வித்​துள்​ள​தாக, அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் தரப்​பில் சில தகவல்​கள் நேற்று பரப்​பப்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

அதாவது, தமி​ழ​கத்​தில் பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​களின் பட்​டியலை பழனி​சாமி​யிடம், பியூஷ் கோயல் வழங்​கி​னார். அப்​போது, தமி​ழ​கத்​தில் 40 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட விரும்​புவ​தாக அவர் பழனி​சாமி​யிடம் தெரி​வித்​துள்​ளார். ஆனால், பாஜக கொடுத்த பட்​டியலை பழனி​சாமி வாங்​க​வில்​லை. மாறாக, அவர் ஒரு பட்​டியலை தயார் செய்​து, பியூஷ் கோயலிடம் வழங்​கி​னார். அதில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு கட்​சிக்​கும் ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எண்​ணிக்கை குறித்த விவரம் இருந்​தது.

அந்​தவகை​யில், அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, ஜி.கே.​வாசன் தரப்பு 3 என தொகு​தி​கள் பிரிக்​கப்​பட்டு பட்​டியல் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த பட்​டியல் எப்​படி தயார் செய்​யப்​பட்​டது என்​பதை விளக்​கும் வகை​யில், கடந்த 4 தேர்​தல்​களில் ஒவ்​வொரு தொகு​தி​களி​லும், அந்​தந்த கட்​சிகள் பெற்ற வாக்​கு​கள் சதவீதம் தொடர்​பான விவரங்​களை​யும் பாஜக​விடம் பழனி​சாமி வழங்​கி​னார்.

பாமக, தேமு​திக, ஜி.கே.​வாசன் தரப்​புக்கு தேவை​யான தொகு​தி​களை வழங்கி அவர்​களை அதி​முக ஒருங்​கிணைக்​கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்​கிணைத்​துக் கொள்​ளட்​டும் என பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதே​நேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதி​முக தலை​மையை ஏற்க வேண்​டும், முதல்​வர் வேட்​பாளர் தொடர்​பாக அவர்​கள் இரு​வ​ரும் எந்த கருத்​தும் தெரிவிக்க கூடாது என்​றும் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

ஆனாலும், ஆலோ​சனை கூட்​டத்தை முடித்​து​விட்டு வெளியே வந்த பியூஸ் கோயல், பழனி​சாமி, நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட யாரும், தொகுதி பங்​கீடு தொடர்​பான எந்த தகவலை​யும் தெரிவிக்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.