சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் டெல்லியில் கைது

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் டெல்லியில் கைது

சைபர் குற்​றங்​களில் ஈடு​பட்டு பொது மக்​களிடம் ரூ.254 கோடிக்கு மேல் மோசடி செய்த 42 பேரை டெல்லி போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

ஏடிஎம் மோசடி, டிஜிட்​டல் கைது உட்பட சைபர் குற்​றங்​களில் டெல்​லியை சேர்ந்த ஒரு கும்​பல் ஈடு​பட்​டுள்​ளது. இவர்​கள் டெல்​லி, உத்தர பிரதேசம் ஹரி​யா​னா, மும்​பை, கொல்​கத்​தாவைச் சேர்ந்​தவர்​களிடம் ரூ.245 கோடிக்கு மேல் மோசடி செய்​துள்​ளனர். இது தொடர்​பாக டெல்லி போலீ​ஸார் 23 வழக்​கு​களை பதிவு செய்​​தனர்.

கோட்லா முபாரக்​பூரில் கால் சென்​டர்​களை நடத்​திய சிலரும் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் இருந்து கம்ப்​யூட்​டர், லேப்​டாப்​கள், செல்​போன்​கள், மோசடி பணப் பரி​மாற்​றங்​கள் விவரங்​கள் அடங்​கிய பதிவேடு ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன. மந்​த​வாலி மற்​றும் நஜாப்​கர் ஆகிய பகு​தி​களி​லும் சோதனை நடத்​தப்​பட்டு பலர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த ஆபரேஷனில், சைபர் குற்​றங்​களில் ஈடு​பட்ட 42 பேர் கைது செய்​யப்​பட்​டனர்​.