முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் மவுன அஞ்சலி

முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களவையில் மவுன அஞ்சலி

முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு மக்களைவையில் அஞ்சலி செலுத்திய பின்னர் அவை 12மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவையின் முன்னாள் சபாநாயகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீலின் மறைவு குறித்த முக்கிய அறிவிப்பை அவையில் வெளியிட்டு சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். அப்போது அவர், “முன்னாள் சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் மறைந்துவிட்டார் என்பதை இந்த அவைக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

2004 முதல் 07 வரை மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சராக, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களின் ஆளுநராக, சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக அவர் இருந்திருக்கிறார்.

கடந்த 2001, டிச. 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் நினைவு நாள் நாளை வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அவை அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.