இலங்கை வெள்ளத்தில் சிக்கிய பச்சிளங் குழந்தையை பத்திரமாக மீட்ட இந்திய மீட்பு குழு!

இலங்கை வெள்ளத்தில் சிக்கிய பச்சிளங் குழந்தையை பத்திரமாக மீட்ட இந்திய மீட்பு குழு!

இலங்​கை​யில் பெய்த கனமழை மிக​வும் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​யுள்​ளது. வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 463 பேர் உயி​ரிழந்​த​தாக​வும், நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போன​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, நிவாரணப் பணி​களை மேற்​கொள்ள இந்​தி​யா​விலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்​டிஆர்​எப்) அனுப்பி வைக்​கப்​பட்​டது. மேலும்​,வெள்ள நிவாரணப் பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. வெள்​ளத்​தில் சிக்கி உயிருக்கு போ​ராடிய ஆயிரக்​கணக்​கா னோரை இந்​திய படை மீட்ட நிலை​யில், MyGovIndia இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது. இதைப் பார்த்த இணை​ய​வாசிகள், “குழந்தை பாதுகாப்பான கரங்​களில் உள்​ளது", “இது​தான் நம்மை இந்​தி​யா​வோடு ஒருங்​கிணைக்​கிறது", "அன்​புக்கு எல்​லைகள் கிடை​யாது" என்று இந்​தி​யாவை பா​ராட்டி பலர் கருத்​துகளை பதிவிட்டுள்ளனர்.