ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

ம.பி.யில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

 மத்திய பிரதேசத்​தில் 2 வெவ்​வேறு இடங்​களில் துர்கா சிலைகளை கரைக்​கும் நிகழ்ச்​சி​யில் 10 சிறு​வர்​கள் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். நாடு முழு​வதும் நவராத்​திரி விழா​வின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, மத்​திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்​கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்​ப​தற்​காக நேற்று டிராக்​டரில் எடுத்​துச் சென்​றுள்​ளனர்.

அந்த டிராக்​டரில் சிறு​வர்​களும் பயணித்​துள்​ளனர். சம்​பல் நதி​யின் மீது உள்ள பாலத்​தின் மீது டிராக்​டர் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது 12 வயது சிறு​வன் திடீரென இன்​ஜினை ஆன் செய்​த​தால் வாக​னம் திடீரென முன்​னேறி சம்​பல் நதி​யில் விழுந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதில் 12 சிறு​வர்​கள் தண்​ணீரில் விழுந்த நிலை​யில், 11 பேர் மீட்​கப்​பட்​டனர். ஒரு​வரை காண​வில்​லை. காணா​மல் போன சிறு​வனை போலீ​ஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது​போல காந்த்வா மாவட்​டம், பந்​தனா நகருக்கு அருகே உள்ள அர்த்லா மற்​றும் ஜம்லி கிராமங்​களைச் சேர்ந்த சுமார் 30 பேர் துர்கா சிலைகளை நீர்​நிலைகளில் கரைக்க டிராக்​டரில் சென்​றுள்​ளனர்.

அப்போது அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினர் 8 சிறுமிகள் உட்பட 11 பேரின் சடலங்களை மீட்டனர். கிரேன் உதவியுடன் அந்த டிராக்டரை மீட்ட அவர்கள், காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிக சுமைகாரணமாக அந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் சிக்கி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு முதல்​வர் மோகன் யாதவ் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்​றும், காயமடைந்​தவர்​களுக்கு தரமான சிகிச்சை வழங்​கப்​படும் என்​றும் உறுதி அளித்​துள்​ளார்.

“காயமடைந்​தவர்​கள் விரை​வில் குணமடைய வேண்​டும் என்​றும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கு மன உறு​தியை வழங்​க வேண்​டும்​ என்​றும்​ துர்​கா தேவி​யிடம்​ பி​ரார்​த்திக்​கிறேன்​” என்றும்​ தெரி​வித்​துள்​ளார்​.