5 ஸ்டார் பார்களுக்கு குடிப்பக உரிமங்கள் ரத்து செய்து; 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!

5 ஸ்டார் பார்களுக்கு குடிப்பக உரிமங்கள் ரத்து செய்து; 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!
By: No Source Posted On: August 06, 2024 View: 4259

5 ஸ்டார் பார்களுக்கு குடிப்பக உரிமங்கள் ரத்து செய்து; 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!

 

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

சென்னையிலுள்ள தனியார் 5 நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள குடிப்பகங்களில்,

 

அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.

 

ஆனால், சர்ச்சைக்குரிய விடுதிகளில் வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவற்றின் குடிப்பக உரிமங்கள் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை சரியானது தான்.

 

ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள்

 

மீண்டும் வழங்கப்பட்டது எப்படி?

 

குடிப்பகங்களில் எந்த விதிமீறலும் நடக்கவில்லையா?

 

அல்லது மது வணிகம் என்பது 'தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி' என்பதால் நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா?

 

என்பது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் வலியுறுத்தினார்.

Tags:
#Anbumani Ramadoss  # PMK  # TN Govt  # அன்புமணி ராமதாஸ்  # பாமக  # மது உரிமம்  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos