
பல விமர்சனங்களுக்கு பிறகு சென்னை அணி ஐபில் இன்று லக்னோ அணியை வெல்லுமா?
தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி வெற்றியை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.
8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது.
சொந்த மண்ணில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் இறங்குகிறது.
சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சியுள்ள 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். இதனால் சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
அதேநேரத்தில் லக்னோ அணி தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், ஒரு ஆட்டத்தில் சென்னையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.