
விசுவாவசு புத்தாண்டு பிறந்தது - தமிழ் ஆண்டு எப்படி இருக்கும் பார்க்கலாம் வாங்க ..!
காலம்” என்னும் சக்திக்குத்தான் எத்தனை வேகம்.? எத்தனை அவசரம்.?! நேற்றுதான், பிறந்ததுபோல் தோன்றுகிறது, “குரோதி” தமிழ்ப் புத்தாண்டு. அதற்குள்ளாக முடிந்து, “விசுவாவசு” தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது,
இப்போது! காலத்தின் வேகம்தான் எத்தனை…? இதைத் தங்கள் மனதில் வைத்துக் கொண்டுதான், நமது முன்னோர்கள் “காலமும், கடல் அலையும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.!” என்றனர் போலும்?ஒருவிதத்தில், பல உலக நாடுகளில், விரோதிகளாக்கிய குரோதிப் புத்தாண்டு முடிகிறது என்ற மனசாந்தியும் ஏற்படுகிறது. உலக நாடுகளிலேயே, பகைமையை வளர்த்து, விதியுடன் விளையாடியது, குரோதி!உக்ரைன் – ரஷ்யா போரிலும், பாலஸ்தீனம், இஸ்ரேல் சண்டைகளிலும் வீடிழந்து, குடும்பங்கள் சிதறி, உருக்குலைந்த பெண்களும், இளைஞர்களும், வயோதிகர்களும், கைக்குழந்தைகளும் எண்ணிலடங்கா. எவ்விதத் தவறும் செய்யாத, பிணைக்கைதிகள் பட்ட அவமானங்களும், சித்ரவதைகளும், மனித குலத்தையே தலைகுனிய வைத்துள்ளன. “பகுத்தறிவுள்ள மிருகமே மனிதன்..!” என மேலை நாட்டு அறிஞர் பல ஆண்டுகளுக்கு முன் கூறியது, நினைவிற்குரியது.
அந்தப் பகுத்தறிவுதான், இப்போது எங்கு போயிற்று.? மனிதாபிமானம்தான் எங்கு சென்று மறைந்தது? மனிதனை, மனிதனே வெறுக்கும் இத்தகைய வெறி ஏன் ஏற்பட்டது? எனப் பெரியோர்களும், சான்றோர்களும் வேதனையில் ஆழ்ந்திருக்கும் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பது நம்பிக்கையை ஊட்டியது. மிருகமாக மாறியுள்ள மனிதன் இப்புத்தாண்டிலாவது, தன் தவறை உணர்ந்து, மனிதப் பண்புடன் வாழ முயற்சிப்பானா? என்பதே பெரியோர்களின் இன்றைய கவலையாகும்.ஒருவிதத்தில், குரோதி ஆண்டு முடிகிறது என்பதால் மனமும் சாந்தி பெறுகிறது. விதியுடன் விளையாடி, மனிதனே மனிதனை கொன்று குவிக்கும் கொடூரம் இப்புத்தாண்டிலாவது நிற்குமா? -என்பதே அனைவரின் கவலையும், எதிர்பார்ப்புமாகும்.காசாவிலும், உக்ரைனிலும், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள், வியாதியஸ்தர்கள் என்ற பாகுபாடு மன இரக்கம் எதுவுமின்றி, “ட்ரோன்கள்”, ராக்கெட் மூலம் வான்வெளித் தாக்குதல்களில், நிர்மூலமானவர்கள் எண்ணிலடங்காதவை! இப்படுபாதகச் செயல்கள் நின்றபாடில்லை!
இந்நிலையில்தான், விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டுடன் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் பிறக்கின்றன. மக்கள் மனதில்தான் எத்தனையெத்தனை நம்பிக்கைகள்!இத்தகைய சூழ்நிலையில், நவகிரகங்களும் இத்தமிழ் புத்தாண்டு எவ்விதம் இருக்கப்போகிறது? என்பதை எடுத்துக்காட்டப் போகின்றது, வேதங்களின் அங்கங்களில் ஒன்றான “ேஜாதிடம்” எனும் ஒப்புயர்வற்ற வானியல் கலை!சூரிய பகவானின் சஞ்சார நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ள, “ஷோடச ஸதவர்க்கம்” எனும் வானியல் பூர்வமான கணித முறை மூலம் கணித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.”ஜோதிடம்” என்னும் தன்னிகரற்ற வானியல் கணித முறை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது? என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக மட்டுமே மகரிஷிகள் நமக்கு அளித்துள்ள கணித முறையல்ல! எத்தகைய தருணங்களில், நாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்: 15-1-2026 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.17-க்குள், கும்ப லக்னத்தில், சுக்கிர ஹோரையில், புதுப் பானையை அலங்கரித்து, பொங்கல் வைக்கவும். “பொங்கலோ, பொங்கல்” சொல்லி, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்யவும். குடும்பத்திலுள்ள அனைவரும் சூரிய பகவானுக்கு, கற்பூராத்தி காட்டி, நமஸ்கரிக்கவும். இன்று, வீட்டிலுள்ள பெற்றோர், பெரியோர்களை வணங்கி, அவர்களது ஆசியைப் பெறவும்.மறுநாள் மாட்டுப் பொங்கல். பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றைக் குளிப்பாட்டி, மஞ்சள்-குங்குமமிட்டு, புஷ்பத்தால் அலங்கரித்து, பொங்கல் கொடுத்து, கற்பூராத்தி காட்டி, மும்முறை வலம் வந்து வணங்கவும். குடும்பத்தில், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி நிலவும். இதற்கு மறுதினம் “காணும் பொங்கல்”. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் ஆகியோரைக் கண்டு அவர்களது ஆசியைப் பெறும் நன்னாளாகும்.
விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ஆம் தேதிக்கு சரியான ஆங்கலத் தேதி 7-9-2025, ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில், மேஷ லக்னத்தில், ராகு கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : இரவு மணி 9.51
கிரகணம் மத்தியமம் : இரவு மணி 11.42
கிரகணம் முடிவு : இரவு மணி 2.25
அன்று மதியம் 1.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். கிரகண காலத்தில், தாய் – தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு, நீராடி, அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.
பலன்கள்: புத்தாண்டின் நாயகனாக சூரியன் திகழ்வதால், மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். ரத்தம், நரம்புகள் மற்றும் இதயம், சம்பந்தமான நோய்கள் குறையும். மக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் அதிகரிக்கும். நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள தேச பக்தியினர் பலம் பெறுவார்கள். சந்திரன், மந்திரியாக விளங்குவதால், முத்து, பவழம், நவரத்தினங்கள் ஆகியவற்றின் விலை குறையும். ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும்.சூரிய பகவான் சேனாதிபதியாக வீற்றிருப்பதால், தேச விரோதிகள் ஒடுக்கப்படுவார்கள். தேச பக்தி அதிகரிக்கும். உலக நாடுகளிடையே பகையுணர்ச்சி மேலிடும். ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும். பாகிஸ்தானில் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரிக்கும். இந்திய – சீன உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தைப் பெறும். இந்திய – அமெரிக்க உறவில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிக்கும். மத்திய கிழக்கு நாடுகளான, துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா ஆகியவற்றுடன் வர்த்தகத் தொடர்பு மேம்படும்.