மதுரை எய்ம்ஸ் - ஒன்றிய அரசின் தோல்வி : அமைச்சர் மா சு பேட்டி!

மதுரை எய்ம்ஸ் - ஒன்றிய அரசின் தோல்வி : அமைச்சர் மா சு பேட்டி!
By: No Source Posted On: August 07, 2024 View: 4466

மதுரை எய்ம்ஸ் - ஒன்றிய அரசின் தோல்வி : அமைச்சர் மா சு பேட்டி!

 

எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்காததால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடன் வாங்கி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது,

 

ஒன்றிய அரசு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் எனும் நம்பிக்கை உள்ளது என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 60 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை மருத்துவம் மற்றும்

 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்,

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்

 

 

"தமிழகத்தில் 50 இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது,

 

பணிகள் முடிவுற்றவுடம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,

 

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்,

 

நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளும் வகையில் பேசியுள்ளார்,

 

நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டுவோம் என கூறியுள்ளார்,

 

தமிழக அரசின் சார்பில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வலியுறுத்த உள்ளோம்,

 

ஒன்றிய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நிதி என அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்,

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசின் நேரடி நிதியை பெற்று இருந்தால் இன்றைக்கு எம்ய்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்திருக்கும்,

 

எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைக்காத காரணத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கடன் வாங்கி கட்ட வேண்டிய சூழலாலனது,

 

எம்ய்ஸ் மருத்துவமனை கட்டும் பணியும் தள்ளிக் கொண்டே செல்கிறது,

 

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் எம்ய்ஸ் மருத்துவமனை மாணவர்கள் 4 ஆவது ஆண்டாக கல்வி பயில்கிறார்கள்,

 

காலம் கனிந்து வரும் ஒன்றிய அரசு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டும் எனும் நம்பிக்கை உள்ளது,

 

உடல், உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்க் கொள்ள தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது,

 

மக்களிடம் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது,

 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிலுவையில் உள்ள அரசின் நிதியுதவி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது" என கூறினார்.

 

Tags:
#Ma Subramanian  # dmk  # MaduraiAIIMS  # AIIMS  # BJP  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos