சீனாவை இந்தியாவில் நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம்.. நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி யோசனை..!

சீனாவை இந்தியாவில் நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம்.. நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி யோசனை..!
By: No Source Posted On: August 05, 2024 View: 1214

சீனாவை இந்தியாவில் நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம்.. நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி யோசனை..!

 

சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல்,

 

அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது என நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.

 

செய்தி நிறுவனத்திற்கு, அரவிந்த் விர்மானி அளித்த பேட்டி

 

ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நாம் சீனாவில் இருந்து தான் பொருட்களை இறக்குமதி செய்யும் சூழல் நிலவும் என தெரிகிறது.

 

ஆனால், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது

 

உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீனாவில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டை கோருவது நல்லது.

 

இதனால் சீனாவில் இருந்து நாம் பொருட்களை இறக்குமதி செய்ய ஆகும் செலவு குறையும்.

 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகிறது.

 

இந்நிலையில் சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்தால் நாம் பிற நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:
#China  # India  # NITI Aayog  # Arvind Virmani  # நிடி ஆயோக்  # சீனா  # இறக்குமதி  # முதலீடு  # உள்நாட்டு உற்பத்தி  # சீனா பொருட்கள்  # Investment Domestic production  # China Goods  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos