இன்று திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கிய அதிசயம் ..!

இன்று  திருச்செந்தூரில்  கடல் 100 அடி  உள்வாங்கிய அதிசயம் ..!
By: punnagainews Posted On: April 17, 2025 View: 353

இன்று திருச்செந்தூரில் கடல் 100 அடி உள்வாங்கிய அதிசயம் ..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று கடல் நீர் திடீரென உள்வாங்க தொடங்கியது. பின்னர் சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூரில் கடல்நீர் அடிக்கடி உள்வாங்குவதும் பிறகு இயல்புநிலை திரும்புவதும் சாதாரண நிகழ்வு ஆகி விட்டதால் பக்தர்கள் பயம் இல்லாமல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos