
திருமணம் நாளுக்காக காத்திருக்கும் மணப்பெண்களுக்கான ஆலோசனை..!
திருமணம் நாளுக்காக காத்திருக்கும் மணப்பெண்கள் பலர், சருமப் பராமரிப்பில் செய்யும் தவறுகள், அந்நாளையே பாழாக்கிவிடுகிறது.
அப்படி என்னென்ன தவறுகளை பண்ணக்கூடாது என கூறுகிறார், தோல் சிகிச்சை நிபுணர்கள்
திருமணத்திற்கு முன்பு அவகாசம் இருந்தால், ஆறு மாத காலம் சரும பராமரிப்புக்கு அவசியம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன் துவங்குவது சரியாக இருக்கும்.
குறைந்த நாட்களே அவகாசம் உள்ள சூழலில், புதிதாக ஏதும் கிரீம் பயன்படுத்துவது, பார்லர் செல்வதை தவிர்க்க வேண்டும்.
சருமத்தில் பிக்மென்டேசன், துளைகள், பருக்கள் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் டாக்டரை அணுகி, அதற்கான சிகிச்சை எடுத்த பின்னரே, சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பிரச்னைகளை சரிசெய்யாமல், சரும பராமரிப்பு மேற்கொள்வது மேலும், சிக்கலை அதிகரிக்கும்.
ரெகுலராக கிளென்சிங், மாய்ஸ்ரைசர், சன்ஸ்கீரின் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் குடிப்பதும், நல்ல ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். சில உணவுகள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு.
கட்டாயம் சரியான நேரத்தில் உறக்கம் அவசியம். திருமண நேரங்களில் மனஅழுத்தம் இருப்பது இயல்பு. இதனால், துாக்கத்தை கெடுத்துக்கொண்டால், திருமண நாளில் முகம் மலர்ச்சியுடன் இருக்காது.
ஸ்டிராய்டு பயன்படுத்தப்பட்ட, ஸ்கின் ஒயிட்டனிங் கிரீம்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது. இதை பயன்படுத்தி உடனடியாக முகம் பளிச்சென மாறினாலும், திருமணத்திற்கு பின் பாதிப்புடன் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
எந்த ஒரு கிரீம்களையும் புதிதாக இணையதளங்களில் பார்த்து, சுயமாக வாங்கி பயன்படுத்த கூடாது.
டாக்டர் ஆலோசனை படி, கெமிக்கல் பீல், ைஹட்ரோ பேசியல் செய்து கொள்ளலாம். அதற்கும் உரிய அவகாசம் வேண்டும்.
கெமிக்கல் பீலிங் சிகிச்சை எடுத்தவர்கள், வீட்டில் உள்ள உருளைகிழங்கு, மஞ்சள், தக்காளி போன்றவற்றையோ, பிற கிரீம்களையோ முகத்தில் பூசுவதை தவிர்க்க வேண்டும்.