சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் - தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

 சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் - தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!
By: punnagainews Posted On: April 07, 2025 View: 3085

சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் - தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

தமிழக சட்டசபையில் இன்றைய கேள்விநேரத்தின் போது, சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கோரிக்கை வைத்தார் .

இந்த நிலையில், மனோஜ் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் , திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று இந்தப் பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன். என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos