
சர்ப்ரைஸ் மழை.. சென்னை மக்கள் மகிழ்ச்சி
சென்னை - பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும்
அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது..
இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது,
இதன் காரணமாக சென்னையில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது,
இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.