
ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்: 2 ராணுவ வீரர்கள் பலி!
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், ராணுவத்தினர், ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இரு தரப்பிற்கும் பல மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
#Jammu and Kashmir
# Encounters
# Army
# Death