ஆட்சியை பிடித்தது ராணுவம்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

ஆட்சியை பிடித்தது ராணுவம்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!
By: No Source Posted On: August 05, 2024 View: 7536

ஆட்சியை பிடித்தது ராணுவம்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

 

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார்.

 

இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

 

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

 

சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.

 

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது.

 

இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

 

இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

 

பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

 

இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

 

அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

 

தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

 

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார்.

 

தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை.

 

டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

Tags:
#Bangladesh  # Students Protest  # Sheikh Hasina  # Resign 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos