
2வது ஒருநாள் போட்டி: இன்று இந்தியா – இலங்கை பலப்பரீட்சை
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று நடைபெற உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதி வருகிறது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி, எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் முடிந்தது.
இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அரை சதம் விளாசி நல்ல தொடக்கத்தை தந்தார் ரோகித்.
அடுத்து வந்தவர்கள் பெரிதாகக் கை கொடுக்காவிட்டாலும், கே.எல்.ராகுல் – அக்சர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை நெருங்கினர்.
அவர்கள் ஆட்டமிழந்தபோது, இந்தியா 40.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்திருந்தது.
அதன் பிறகு 47.3 ஓவரிலேயே 230 ரன் எடுத்து சமநிலையை எட்டினாலும், தேவையில்லாமல் அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டம் டை ஆனது.
இரு அணிகளும் 0-0 என சமநிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது.
Tags:
#ODI
# IND vs SL
# BCCI