நாளை இந்தியா-இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் மோதல்

நாளை இந்தியா-இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் மோதல்
By: No Source Posted On: August 01, 2024 View: 43

நாளை இந்தியா-இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் மோதல்

 

இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது.

 

இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

 

பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

 

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் கில், கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது.

 

ஷிவம்துபே, ரியான்பராக், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் என ஆல்ரவுண்டர்கள் இடையே ஆடும் லெவனில் இடம் பிடிக்க போட்டி உள்ளது.

 

பவுலிங்கில் சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் இடம்பெறக்கூடும்.

 

மறுபுறம் இலங்கை அணி புது கேப்டன் சரித் அசலங்கா தலைமையில் களம் இறங்குகிறது.

 

குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, சதீரா சமரவிக்ரமா, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் பவுலிங்கில் பதீரனா, தீக்ஷனா, ஹசரங்கா, தில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரத்னே வலுசேர்ப்பர்.

 

 

நாளை இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

 

Tags:
#ODI  # IND vs SL  # BCCI  # Cricket 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos