.jpg)
நல்ல தூக்கம் வர இவைகள் செய்தால் போதும் !
கசகசாவை லேசாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடி பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
மருதாணிப்பூ இரண்டை தினமும் இரவு சாப்பிட்டு வரவும்.
பச்சை வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும். தேனில் கலக்காமல் பச்சை வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை கொண்டு வரும்.
கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடியை எடுத்து 1 டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைபழத்துடன் சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும்.
திருநீற்றுப்பச்சிலையை நசுக்கி முகர தூக்கமின்மை குறையும்.
சுரை இலையின் இளம் இலைகளைச் சமைத்து உண்ணத் தூக்கமின்மை குறையும்.
கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
சிறிதளவுவெங்காயம் சிறி தளவுஉப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து இரவு சாப்பிட்டு வந்தால் இருமலால் தூக்கம் வராமல் இருந்தால் தூக்கம் வரும். இதை இரத்த கொதிப்பு உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்.
இரவு உணவுடன் பூண்டு சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
பேரீச்சம்பழம், முருங்கை, ஆப்பிள், எலுமிச்சை, கேரட், திராட்சை, தேங்காய் பால், கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாறு எடுத்து குடித்திட தூக்கமின்மை குறையும்.
ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.
ஒரு தேக்கரண்டி அளவு சோம்பை எடுத்து அதில் 250 மில்லி தண்ணீர் விட்டு நன்கு மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பால் மற்றும் தேன் கலந்து படுக்க போகும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
1 டம்ளர் வெது வெதுப்பான பாலை எடுத்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடி மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து இரவில் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
Tags:
#தூக்கம்
# Sleep