மூத்தவர்களுக்கு 'கிலி', இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மூத்தவர்களுக்கு 'கிலி', இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
By: No Source Posted On: August 27, 2024 View: 3330

மூத்தவர்களுக்கு 'கிலி', இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தி.மு.க. பொறியாளர் அணி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் கலைவாணர் அரங்கத்தை இரண்டு நாட்கள் குத்தகை எடுத்துக்கொண்டு மிக சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி இருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தை நமது முதலமைச்சர் வெளியிட்டார். இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி.

 

அதில் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட 45 நிமிடம் நம்முடைய தலைவரைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும் பாராட்டி பேசினார்.

 

அதன் தொடர்ச்சியாக பொறியாளர் அணி சார்பில் நிகழ்ச்சி நடக்கிறது. அண்ணன் பொன்முடி பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.

 

அவருக்கு ஒரு ஏக்கம் என்ஜினீயரிங் படிக்க முடியவில்லையே என்றார். எனக்கெல்லாம் அந்த ஏக்கம் இருந்தது கிடையாது. நான் அதற்கான முயற்சி எடுக்கவே இல்லை.

 

நாங்கள் படிக்கும் போதெல்லாம் எம்.பி.பி.எஸ். பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று நினைப்போம். எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் பக்கமே போக மாட்டோம். நேராக பி.காம் முடித்து விட்டு அப்படியே பிசினஸ் பார்க்க போய் விடுவோம்.

 

அதே மாதிரி அண்ணன் பொன்முடி பேசும்போது சொன்னார் தயாநிதி மாறனுக்கு மூத்தவர்களை கண்டால் பிடிக்கவே பிடிக்காது என்றார். அப்படியெல்லாம் கிடையாது. நான் ஏன் இதைசொல்கிறேன் என்றால், அண்ணன் தயாநிதி மாறனே எனக்கு மூத்தவர்தான் எனக்கு எல்லோருமே சமம்தான். இன்னும் சொல்லப் போனால் இங்கு இருப்பதிலேயே மிகவும் சின்னவன் நான்தான்.

 

தி.மு.க. இளைஞரணி அறிவித்து கிட்டத்தட்ட 17 ஆயிரம் மாணவர்கள் கலைஞரின் உயிரினும் மேலான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

 

இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நம்ம பக்கம் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம்தான் அவங்களுக்கு வழிவிட்டு அரவணைத்து அவங்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்னொரு வேண்டுகோள் வழிவிட்டு வழி நடத்தி கைபிடித்து கூட்டி செல்ல வேண்டும்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் பேசும்போது எதற்கு அதிகமான கைத்தட்டல்கள் என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் சொல்லக்கூடாது. நான் சொன்னால் ஏதோ மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறேன் என்று நினைத்து கொள்வீர்கள். தொலைக்காட்சிகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை இளைஞரணியினர் வரவேற்கும் நிலையில் மூத்தவர்களுக்கு இப்போது 'கிலி' ஏற்பட்டு உள்ளது.

 

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தி துரைமுருகனை பார்த்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அமைச்சர் துரைமுருகனும் காட்டமாக பதில் தெரிவித்திருந்தார். அதன் பிறகே இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அண்ணா கட்சி ஆரம்பித்த காலத்தில் தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு 35 வயதுதான். ஆனால் இப்போது 50 வயதை தாண்டியவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

 

வாக்காளர் பட்டியலில் கூட இப்போது 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதனால்தான் இளைஞரணியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல ரஜினிகாந்தும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.

 

எனவே இந்த கருத்துக்களால் தி.மு.க.வில் மாற்றங்கள் தொடங்கி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். அதனால்தான் கட்சியில் மூத்தவர்களுக்கு இப்போது 'கிலி' ஏற்படுகிறது" என்றார்.

Tags:
#மூத்தவர்களுக்கு கிலி  # இளைஞர்களுக்கு வழி விடவேண்டும்  # உதயநிதிஸ்டாலின்  # DMK  # Tamilnaducm  # udhayanithi  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos