
சப்ஜா விதையில் பல நன்மைகள் உள்ளன, 'யார் சாப்பிட கூடாது' 'யார் சாப்பிடலாம்'
சப்ஜா விதையை யார் சாப்பிடக்கூடாது?
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குறைந்த இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், சிறிய குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஆஸ்துமா நோய் இருப்பவர்கள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சப்ஜா விதையை யார் சாப்பிடலாம்?
மேல் குறிப்பில் இல்லாதவர்கள் அனைவரும் சப்ஜா விதைகள் சாப்பிடலாம்.
சப்ஜா விதைகள்:
இந்த சப்ஜா விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இதனால், ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும், சரும பாதிப்பு முதல் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது வரை அத்தனை அற்புத நன்மைகளை வழங்குகின்றன.
தற்போது, சப்ஜா விதைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம், மற்றும் இதை துளசி விதைகள் என்று சொல்லக்கூடியவை.
வலுவான அழகான கூந்தலுக்கு
அதிகளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து முடி உதிர்வை குறைத்து, இயற்கையாக முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
அடர்த்தியான வலிமையான கூந்தலை பெற சப்ஜா விதை ஹேர் ஆயிலை தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை நன்றாக தடவி 5 நிமிடம் ஹெட் மசாஜ் செய்து, 20 - 30 நிமிடங்கள் கழித்து, ஹேர் வாஷ் செய்துக் கொள்ளவும்.
இது பொடுகை போக்குவதோடு, முடிக்கு பளபளப்பை தருகிறது.
சருமத்திற்கு நன்மை
விசெனின் மற்றும் ஓரியண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
இவை சருமத்தில் புதிய தோல் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதனால், என்றும் இளமையான சருமத்தை கொண்டிருப்பீர்கள்.
மேலும், இதிலுள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை தடுக்கிறது.
சருமத்தில் உள்ள சுருக்கம், கோடுகள், வறட்சியை போக்கி, சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்ளும்.
உடல் எடையை குறைக்கும்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி எடையை குறைக்கிறது.
இவற்றில் புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீண்ட நேரத்திற்கு முழுமையாக உணர வைக்கிறது மற்றும் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை குறைக்கிறது.
ஆரோக்கியமான எடை இழப்பிற்கு உதவும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்ளவும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாக உள்ளது.
இது, பார்கின்சன் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த சப்ஜா விதை அன்றாடம் சேர்த்துக் கொண்டால் நிவாரணம் பெறலாம்.
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சப்ஜா விதைகளில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிடும் உணவில் இருந்து நம் உடல் சர்க்கரையை உறிஞ்சிக் கொள்ளும் வேகத்தை மெதுவாக்கும்.
உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் 1 - 2 ஸ்பூன் சப்ஜா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் 15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து, அத்துடன் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து வாரத்தில் இரண்டு முறை குடித்துவரவும்.
இது இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, நல்ல செரிமானத்திற்கும் உதவும்.
செரிமான அமைப்பை மேம்படுத்தும்
சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கும்போது அதில் கரையக்கூடிய நார்ச்சத்து உருவாகும். அதை தண்ணீருடன் அப்படியே குடிக்கும்போது, குடலில் தண்ணீரை வெளிவேற்றுகிறது.
மலம் மென்மையாக்கப்படுவதால் குடல் இயக்கம் எளிதாக இருக்கும்.
மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மையை நீக்குகிறது. அடிவயிறு மற்றும் வயிற்றுப் பகுகளை சுத்தப்படுத்துகிறது. வாயுவை வெளிவேற்றி அஜீரணத்தை போக்கும்.
சிறந்த நச்சு நீக்கி
சப்ஜா விதையை ஊறவைக்கும் போது உருவாகும் ஜெல் போன்ற பொருள் நமது உடலில் உள்ள நச்சுக்குகளை வெளிவேற்றவும், நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது.
இது சரும பளபளப்பை அதிகப்படுத்துதோடு, தேஜஸான கூந்தலை பெற உதவும்.
உடலுக்கு குளிர்ச்சியை தரும்
உடல் சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் சப்ஜா விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, வெயில் காலங்களில் இந்த சப்ஜா விதையை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் சூடு குறைவதோடு, உடலை நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ளும்.
இந்த விதைகளை 1 ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து ஜூஸ், தயிர், ஃபலூடா, ஐஸ்கிரீம், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Tags:
#Sabja Seeds
# Health Tips
# சப்ஜா விதைகள் பயன்கள்