
100 நாள் வேலைத்திட்டம் - என்ன பிரச்சினை? கனிமொழி விளக்கம்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வானரமுட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்வு தொடங்கி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் கனிமொழி எம்.பி பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி 100 நாள் வேலைத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை அதனால் தான் முறையாக வேலைவாய்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது
ஆனாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூடுதலாக நாட்கள் வேலை வாய்ப்பு தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஒன்றிய அரசு இதற்கு மட்டுமின்றி எதற்குமே தமிழகத்திற்கு வேண்டிய நிதியை வழங்குவது கிடையாது என்றும்
விடுபட்ட மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி விரைவில் தகுதி உள்ளவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
#KanimozhiKarunanidhi
# DMK
# Thoothukudi
# 100 நாள் வேலைத்திட்டம்
# மகளிர் உரிமை தொகை