
பிடிவாதத்தால் தோற்கும் 10 தோல்வி பழனிச்சாமி - ஓ.பி.எஸ் காட்டம்
ஜெயக்குமாருக்கு பதில் சொல்ல தேவையில்லை எனவும் அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வந்தது இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் அவரது திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது
மாவீரன் புகழ் உலகம் இருக்கும் வரை உலக மக்கள் இருக்கும் வரை இருக்கும். நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு முதல் குரல் கொடுத்தவர் இவர்தான்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, 50 ஆண்டுகள் ரத்தத்தை சிந்தி வளர்த்த இந்த மாபெரும் இயக்கம், இந்த தேர்தலில் படு தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பதை உணர வேண்டும்.
இரட்டை இலை சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தொண்டர்களின் எழுச்சிக்காக தான் இதனை புரட்சித்தலைவர் உருவாக்கினார்.
பத்து தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என நாட்டு மக்களுக்கு தெரியும், இந்த நிலை தொடரக்கூடாது என்று தான் பிரிந்திருக்க கூடிய அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
முதல் தோல்வியே நான் கூறினேன் தோல்வி ஏற்பட்ட இடத்தில் சென்று நேரடியாக குறைகளை அறிந்து செயல்படுவோம் என்று யாரும் கேட்கவில்லை, விக்கிரவாண்டியில் 83 சதவீதத்தின் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது என்றால், அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றுதான் அர்த்தம், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும் என கூறினார்.
பொது மக்களின் கருத்தை நல்ல அபிப்பிராயத்தை நாம் இழந்திருக்கிறோம்.
ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தைகள் வராது என தெரிவித்தார்.