தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு கொரோனா - 23,000 த்தை தாண்டியது மொத்த பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,000-ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் 1,112 பேர், பிறமாநிலங்களில் இருந்து வந்த 50 பேர் என மொத்தம் 1,162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 14,798லிருந்து 15,770 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 14,750 ஆண்கள், 8,732 பெண்கள், 13 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவுக்கு 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,000-ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 413 பேர் ஒரே நாளில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:
#TN corona update
#