இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு
By: No Source Posted On: June 01, 2020 View: 999

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் காலம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக இருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சகம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 4,614 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 86,983 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 89,995. ஆகும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி,

மொத்தம் பாதிப்பு: 1,82,143 பேர்

மொத்தம் குணமடைந்தோர்: 86,984 பேர்

மொத்தம் பலியானோர்: 5,164 பேர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:
#coronavirus india 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos