மோரை இப்படி குடித்தால் சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும்..!!
அடித்து கொளுத்தும் வெயிலுக்கு மிகவும் சிறந்த குளிர்ச்சியான பானம் இந்த மோர் பானம் தான்…
குளிர்காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர்தான்.
விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சிறுநீரகங்களைக் காக்கும் மோர் பானம்
தேவையானவை
மோர் - கால் டம்ளர்
வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர்
வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன்
இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை
வாழைத்தண்டுச் சாறுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து, வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
குறிப்பு
சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.
பலன்கள்
சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும் சிறந்த பானம்.
இதைத் தொடர்ந்து பருகினால், 5 மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
சிறுநீரகத்தைச் சுத்திகரித்து, உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்கவும் இது உதவும்.
ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.
Tags:
#மோர்
# சிறுநீரகம்
# Kidney
# Butter milk