பம்பரம் சுத்தாது..! குக்கர் விசில் அடிக்காது..! இரட்டை இலை மட்டுமே துளிரும்....! சி.விஜயபாஸ்கர் கலகலப்பான பேச்சு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலகலப்பாகப் பேசினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அவர் திங்கட்கிழமை வேப்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
இதில் அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாதுகூட்டணி கட்சி நிர்வாகிகளான தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் வேட்பாளர் கருப்பையா தனக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தர வேண்டும் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வுக்கு மிகவும் சாதகமாக உள்ளது என்று பேசினார், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது குக்கர் விசில் அடிக்காது ஆனால் இரட்டை இலை துளிர்வது உறுதி என்றார் அவர்.
"நமது வேட்பாளர் ஓடுற பாம்பை மிதிக்கிற வயதுக்காரர் வேண்டுமென்றால் நீங்கள் பாம்பை விட்டு சோதனை செய்து பார்க்கலாம்" என்று அவர் பேசிய போது சிரிப்பலை ஏற்பட்டது
Tags:
##aiadmk #karuppaiah #vijayabaskar