BPCL நிதி உதவியில் புதுப்பொலிவு பெற்ற வடக்குன்குளம் அரசு மருத்துவமனை
வடக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தின்
மேம்படுத்தப்பட்ட இரு கட்டிடங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன.
ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் போஸ்ட் ஆப்பரேட்டிவ் வார்டு ஆகிய 2 கட்டிடங்கள் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் CSR நிதி உதவியுடன் அன்பாலயா அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்டன.
காம்பவுண்ட் சுவர் அமைத்தல் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் பணிகளையும் BPCL நிதி உதவியுடன் அன்பாலயா அறக்கட்டளை மேற்கொண்டது.
மேம்படுத்தப்பட்ட ஆப்பரேசன் தியேட்டரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சவுத் ஹெட் திரு சுஷ்மித் தாஸ் திறந்து வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட போஸ்ட் ஆப்பரேட்டிவ் வார்டினை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஸ்டேட் ஹெட் (Retail) திரு.வெங்கட்ராமன் அய்யர் திறந்து வைத்தார்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருநெல்வேலி மண்டல மேலாளர் திருமதி ரஞ்சிதா கோபால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விருந்தினர்களை கவுரவித்த வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கோலப்பன், வடக்கன்குளம் அரசு மருத்துமனையின் சேவைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
அன்பாலயா அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது.