சர்க்கரை நோய் - அற்றால் அறவறிந்து உண்க

சர்க்கரை நோய் - அற்றால் அறவறிந்து உண்க
By: No Source Posted On: February 07, 2024 View: 2383

சர்க்கரை நோய் - அற்றால் அறவறிந்து உண்க

60 % உணவில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் .தனக்கான உணவைத் தேர்ந்து உண்ண வேண்டும்.


காலை உணவானது அதீத சர்க்கரை உள்ளதாக இருத்தல் கூடாது. மாற்றாக காய்கறித்துண்டுகள்,
சுண்டல் ,முட்டை , நிலக்கடலை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


அரிசியைக் குறைத்து காய்கறிகளைக் கூட்ட வேண்டும்.


இரவு உணவில் அரிசி, கோதுமையை தவிர்ப்பது நன்று. மாற்றாக சிறுதானியங்களை அடையாகவோ, காய்கறிகள் சேர்ந்த கிச்சடியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.


இவை இரத்தத்தில் சர்க்கரையை விரைவில் சேர்க்காது. எனினும் கஞ்சியாகவோ , தோசையாகவோ உட்கொண்டால் சர்க்கரையை இரத்தத்தில் விரைவாக சேர்க்கும்.


கோதுமையாலான உணவுகளை அதிகம் உட்கொண்டால் கோதுமையில் உள்ள " குளூட்டன் " கணையத்தில் உள்ள பீட்டா செல்களை ( beta cells of pancreas ) பாதிக்கச்செய்வதால் நிரந்தரமான சர்க்கரை நோயாளியாக வாய்ப்புண்டு.


இனிப்பு சேராத பச்சைத் தேநீர் கொள்வது சிறப்பு. தேயிலை உடலின் இரத்த நாளங்களை வலுப்படுத்தும் தன்மை உடையது. இனிப்பு கண்டிப்பாக தேவைப்பட்டால் இயற்கையான இனிப்புத்துளசிப் பொடி போன்றன சேர்த்துக்கொள்ளலாம்.


தேநீரில் பால் சேர்த்தல் கூடாது. பால் சேர்ப்பதால் தேநீரானது 75 % மருத்துவப்பயனை இழக்கிறது.


அதிக புளிப்புத்தன்மை இல்லாத மோர் எடுத்துக்கொள்ளலாம். நேரடி இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.


கிழங்கு வகைகளைத் தவிர்க்கலாம். துவர்ப்புச் சுவைக் கலந்த பழங்களைக் கூட்டலாம் (எடு.கா: நாவல், இளம் கொய்யா, விதையுடன் கூடிய மாதுளை ) தனிப்பழங்களாக உண்ண வேண்டும். இனிப்பான பழங்களை பெரும்பாலும் தவிர்க்கலாம்.


நார்ப்பொருட்கள் , கீரைகள் போன்றன உட்கொள்வதால் சர்க்கரைக்கு துணையாகத் தோன்றும் இரத்தக் கொழுப்பு போன்றன கட்டுப்படும்.


வெந்தயம் , பாகற்காய், சுண்டை வற்றல், கறிவேப்பிலை போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கசப்பு துவர்ப்பு சுவையுடைய உணவுகள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.


மேலும் உணவில் அக்கறை கொண்டு மிதமான உடல் உழைப்பு, உடற்பயிற்சி , மூச்சுப்பயிற்சி போன்றன மேற்கொண்டு மனத்தை உற்சாகமாக வைத்துக் கொண்டு அத்துடன் சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

Tags:
#சர்க்கரை நோய்  # Diabetes  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos