நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்
சாலை ஓரம் கல் நட்டு, துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை என்று கூறுமளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கை முற்றிப்போயுள்ளதாக சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
பல்லாவரத்தில் தனது நிலத்துக்கு வெளியே நடப்பட்ட கல்லை அகற்ற தாசில்தாருக்கு பாதுகாப்பு கேட்டு சக்தி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், ஒரு வாரத்தில் கல்லை அகற்றுமாறு பல்லாவரம் காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டது.
Tags:
#மூடநம்பிக்கை
# சென்னை உயர்நீதிமன்றம்
# ஐகோர்ட்