தென்மாவட்ட வெள்ளம் - நிவாரணப் பணியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் BPCL

தென்மாவட்ட வெள்ளம் - நிவாரணப் பணியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  BPCL
By: No Source Posted On: December 24, 2023 View: 27044

தென்மாவட்ட வெள்ளம் - நிவாரணப் பணியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் BPCL

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, அந்த நிறுவனத்தின் திருநெல்வேலி பிராந்திய மேலாளர் ரஞ்சிதா R. கோபால் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2000 நிவாரணப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி, தாமிரபபரணி கரையோரம் அமைந்துள்ள மணிமுத்தீஸ்வரம் பகுதியில் தொடங்கிவைக்கப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நெல்லை டெப்போ மேனேஜர் சிம்ஹாச்சலம், நெல்லை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் அதன் புறநகர் பகுதி மக்களுக்கு உதவிடுமாறு, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருநெல்வேலி பிராந்திய மேலாளர் ரஞ்சிதா R. கோபால் வழிகாட்டியதன் அடிப்படையில், தூத்துக்குடி மேலாளர் ஜெயச்சந்திரன், பொறியாளர் ராகேஷ் மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நேராக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு, டிராக்டர் மூலமாக, அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சர்க்கரை, பிஸ்கட், தண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, வீடு வீடாக வழங்கப்பட்டன.

வெள்ள நிவாரண உதவிகளை பெற்று கொண்ட மக்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

 

 

Tags:
##BPCL #flood #rain #relief  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos