சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் - பிரதமர் மோடி
இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி,
இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது.
இஸ்ரோவில் விஞ்ஞானிகள் என்னென்ன சாதனை படைத்துள்ளீர்களோ, அவை அனைத்தையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது.
சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்.
சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு சாட்சி.
நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.
விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது.
சந்திரயான்-2 கால்தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் 'திரங்கா' என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நினைவுபடுத்தும். என்று அவர் கூறினார்.
Tags:
#சந்திரயான்-3
# லேண்டர்
# பிரதமர் மோடி
# PM Modi
# Chandrayaan
# 3 ISRO
# இஸ்ரோ
# ஆக.23-ந்தேதி
# தேசிய விண்வெளி நாள்