நாக்கு வறட்சிக்கு இயற்கை வைத்தியம்....
1. நாளை குடிக்க வேண்டிய தண்ணீரை இன்று இரவு முழுவதும் மண் பானையில் வைத்து அதன் பிறகு குடித்தால் நாக்கு வறட்சி இருக்காது.
2. குடிக்கும் தண்ணீரை வாயில் வைத்து, அனுமார் போல வாய்க்குள் தண்ணீரை வைத்து, நாக்கை தண்ணீரில் மிதக்க விட்டு, ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் காத்திருந்து அதன் பிறகு தண்ணீரை குடித்தால் நாக்கு வறட்சி குணமாகிவிடும். நாக்கை எவ்வளவு ஈரமாக வைத்திருக்கிறோமா அவ்வளவு விரைவாக நாக்கு வறட்சி குணமாகும்.
3. நீர் காய்கறிகளான புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய் முற்றும் நீர் சத்து அதிகமாக உள்ள தர்பூசணி, சாத்துக்குடி ஆகிய காய் மற்றும் பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
4. தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரை மெதுவாக, பொறுமையாக, வாய் வைத்து ரசித்து, ருசித்து கண்களைமூடி குடிக்க வேண்டும்.
Tags:
#இயற்கை வைத்தியம்