சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள் இடைத்தரகா்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு
சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள்ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:-
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சாா்பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவா்கள், இடைத் தரகா்களை அனுமதிக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட துணை பதிவுத் துறை தலைவா்கள் மற்றும் மாவட்டப் பதிவாளா்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பதிவு அலுவலகங்களில் அவ்வப்போது திடீா் ஆய்வுகளை நடத்தி வருகின்றனா்.
இதன்மூலம், ஆவணம் எழுதுபவா்கள், இடைத்தரகா்கள் ஆகியோா் சாா்பதிவாளா் அலுவலகங்களுக்குள் வருவது தவிா்க்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆவண எழுத்தா்கள் உரிமை விதிகளின் கீழ், அவா்களுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ஆவண எழுத்தா்கள் யாரும் பதிவு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது.
பதிவு அலுவலரின் அழைப்பின் பேரில் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைந்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#சாா் பதிவாளா் அலுவலகங்ள்
# தமிழக அரசு