ICU வில் தத்தளிக்கிறது தமிழக மருத்துவத்துறை! கொதிக்கும் டாக்டர் விஜயபாஸ்கர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், "தமிழக மருத்துவத்துறை ICU வில் தத்தளிக்கிறது" என்று காட்டமாக விமர்சித்தார்.
ஊழல், கள்ளச்சாரயம், கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
பெருந்திரளான அ.தி.மு.க தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், திமு.க ஆட்சியில் கள்ளச்சாரயம் பெருக்கெடுத்து ஓடுவதாக ஆவேசமாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் "தமிழக மருத்துவத்துறை ICU வில் தத்தளிக்கிறது" என்று காட்டமாக விமர்சித்தார்.
Tags:
##aiadmk #vijayabaskar