ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடி....
ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: மத்திய நிதியமைச்சகம் அறிக்கை.
புதுடில்லி, :ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த ஏப்ரல் மாத ஜி.எஸ். டி. ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்கு பிறகு இதுவரை இல்லாத அதிகபட்ச வசூல் இதுவாகும்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022--23ம் ஏப்ரல் மாதம் மொத்த ஜி.எஸ். டி., வருவாய் 1 லட்சத்து 87 ஆயிரத்து, 035 கோடியாகும், இதில் கடந்த ஏப்ரலில் சி.ஜி.எஸ்.டி-ஆக ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-ஆக ரூ.47,412 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி.-ஆக ரூ.89,158 கோடியும், செஸ் வரியாக ரூ.12,025 கோடியும் வசூலாகி உள்ளது. இவ்வாறு நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
Tags:
#ஜி.எஸ்.டி. வசூல்
# மத்திய நிதியமைச்சகம்
# GST
# Finance