சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ...
சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது நற்பலனை தரும். சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
விரதங்கள் :
சோமவார விரதம் :
திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது விரதமாகும்.
உமா மகேஸ்வர விரதம் :
கார்த்திகை பவுர்ணமியில் அன்னம் உண்ணாமல் விரதமிருப்பது உமா மகேஸ்வர விரதமாகும்.
திருவாதிரை விரதம் :
மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணி விரதமிருப்பது ஆகும்.
சிவராத்திரி விரதம் :
மாசி மாதம் அமாவாசை தினத்தில் சிவனின் அருளை பெற உண்ணாமல் இறைவனின் புகழைப் பாடி வணங்குவதாகும்.
கல்யாண விரதம் :
பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து கடவுளுக்கு படையலிட்டு வணங்குவது கல்யாண விரதமாகும்.
பாசுபத விரதம் :
தைப்பூச தினத்தில் விரதம் இருப்பது பாசுபத விரதமாகும்.
அஷ்டமி விரதம் :
வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ;டமி தினத்தில் இறைவனை அனுஷ;டிப்பதாகும்.
கேதார கவுரி விரதம் :
ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம் கேதார கவுரி விரதமாகும்.
Tags:
#சிவபெருமானை வழிபட கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் ...