மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் - 3 பேருக்கு கலாஷேத்திரா செல்ல அனுமதியில்லை - மகளிர் ஆணைய தலைவர்
https://www.youtube.com/watch?v=1EP-GzlZG9sகலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை, முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமசந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டு புகார் குழு( ICC கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மகளிர் ஆணையம் அலுவலகத்தில் ஆஜராகினர். சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணையானது நடைபெற்றது.
இந்த விசாரணையின் பின்பு பேட்டியளித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்ததாவது..
கலாஷேத்ரா கல்லூரிக்கு நாங்கள் விசாரணைக்கு சென்ற போது இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். கலாஷேத்ரா கல்லூரியின் கட்டமைப்பு குறித்தும் அங்கு படிக்கக் கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரித்தோம். அதே போல் மாணவிகள் ஆஃப்லைன் வழியாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதையும் இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும் ஐ சி சி கமிட்டியின் உள்ளிட்டு புகார் குழு அறிக்கையை கேட்டுள்ளோம். நாளை மறுநாள் ஐசிசி கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் செய்த 3 பேருக்கு கலாஷேத்திரா செல்ல அனுமதியில்லை என்று அவர் கூறினார்.
https://www.youtube.com/watch?v=1EP-GzlZG9s
Tags:
#women harassment
#