உண்மையை உணர்வோம்.! - ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்.
தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்..
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க வேண்டும்..
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்..
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...
ஆக எது கெட்டு போகிறதோ..
புழு வண்டு வைக்கிறதோ..
எது அழுகி நாற்றம் எடுக்கிறதோ..
எது ஊசிப் போய் வீணாகிறதோ..
எது குப்பைக்கு போகிறதோ..
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள்..
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்..
பழமுதிர் நிலையகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரம் ஆனாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும் பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா ?? சிந்திப்பீர்...
இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...
பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் மசாலா பாக்கெட்டுகள் நல்ல பொருளா??
ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சு தான்..!
நோயைப் பற்றியும்..மெகா மருத்துவமனை சிகிச்சைகள் பற்றியும்..அதன் செலவுகள் பற்றியும்
உரத்து பேசி அதையே ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் இந்த அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...
உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம் பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம்.
வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக் காரணம்...!
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்.
உண்மையை உணர்வோம்..! - படித்ததில் பிடித்தது ...பகிர்கிறோம் .
Tags:
#health tips
# உணவு முறை
# ஆரோக்ய வாழ்வு