பிராங்க் வீடியோ புகார் - யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

பிராங்க் வீடியோ புகார் - யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை
By: No Source Posted On: November 23, 2022 View: 3267

பிராங்க் வீடியோ புகார் - யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை

பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் ,கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 youtube சேனல்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:
#யூடியூப் சேனல்  # காவல்துறை  # YouTube Channel  # Police 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos