புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, ஈரோடு வணிக வரி மண்டலம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, ஈரோடு வணிக வரி மண்டலம்
By: No Source Posted On: March 12, 2019 View: 8729

புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது, ஈரோடு வணிக வரி மண்டலம்

திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஈரோடு வணிக வரி மண்டலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.,யை திறம்பட செயல்படுத்தும் வகையில், வணிக வரித்துறையை மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை எழுந்தது. இதற்காக, மறுசீரமைப்பு கமிட்டி அமைத்து, வணிக வரித்துறை கருத்துரு பெற்றது, அதனடிப்படையில், தற்போது, சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், வணிக வரித்துறையின் அமலாக்க பிரிவு, நுண்ணறிவு பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்திலிருந்து, திருப்பூர்; திருச்சி மண்டலத்திலிருந்து, கரூர்; சேலம் மண்டலத்தில் இருந்து, ஈரோடு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து, புதிதாக, ஈரோடு வணிக வரி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நான்கு, வேலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லையுடன் ஈரோடும் சேர்த்து, வணிக வரித்துறை மண்டல எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்து உள்ளது.

Tags:
#Erode commercial tax zone  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos